முதலா இல்லை முடிவா
தொடர்வா இல்லை
கரை தொட்டுப் போகும் அலையா
கடல் நீயா
கரை நானா
அலை இக்கணமா
கால் நனைத்து
கை நனைத்து
கண் துளிர்ந்து
முகம் மலர்ந்தேன்
கடலோடு கரைவதா
கரையோடு உறைவதா
கணநேரம் தடுமாறி
மனந் தெளிந்தேன்
எடுத்து வைக்கும் அடியிலெல்லாம்
போகுமிடம் புரிவதில்லை
அடுத்த அடி இடறுமென்று
இருக்குமிடம் இருப்பதில்லை